search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுவிற்றவர் கைது"

    காரிமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவிற்ற 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் அனுமதியின்றி திருட்டு தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காரிமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் மதுவிற்றதன் பேரில் பிடிப்பட்டனர். அவர்களை போலீசார் விசாரணை நடத்தியதில் லட்சுமி (வயது55) மாட்டிலாம்பட்டியை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் லெனின் (42) சந்தை பேட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 

    பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோன்று கடத்தூர் போலீசார் நடத்திய சோதனையில் ஜஷில்பாஷா (36) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    சூளகிரி பகுதியில் அரசு மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் அதிகமாக வாங்கி கூடுதல் விலைக்கு மதுவிற்றவர் சொகுசு காருடன் கைது செய்யப்பட்டார்.
    வேப்பனஹள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பீளாலம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது40). இவர் அடிக்கடி அரசு மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் அதிகமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதனை அதிக விலைக்கு விற்று வந்தார். 

    இது குறித்து ரகசிய தகவல் அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் நேற்று மாலை பேரிகை சாலையில் கோவிந்தன் மறைவான இடத்தில் மது விற்றதை கண்டுபிடித்து அவரை கையும், களவுமாக பிடித்தார்.

    போலீசார் கோவிந்தனிடமிருந்து சொகுசு கார் மற்றும் ரூ. 6,000 மதிப்புள்ள 57 மது பாட்டிகள்களை பறிமுதல் செய்தனர்.
    ×